Thursday, September 15, 2011

மரணத்தை வெல்ல முடியுமா?: காணொளி



பிறந்த்வர் அனைத்து உயிர்களும் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.அறிவியலின் முன்னேற்றத்தால் மனிதனின் ஆயுள் இபோது உலக் அளவு சராச‌ரி 67+ ஆக உள்ளது..வர்லாற்றின் அடிப்படையில் பார்த்தால் சராசரி ஆயுள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது தெரியும்.


http://homework.uoregon.edu/pub/class/hc434/couplings.html


 சில நிறுவனங்கள் சிலரின் உடல்களை வேதி வினைகள் மூலம் பாதுகாத்து வருகின்ற‌ன என்பதும் ,ஒரு நாள் இந்த உடல்களை உயிர் பெற செய்வோம் என்றும் கூறி வருகிறார்கள்.


இந்த காணொளி மரணத்தை வெல்ல முயற்சிக்கும் செயல்களை வரலாற்று ரீதியாக் ஆவணப் படுத்துகிற‌து.அதன் சாத்தியக் கூறுகள்,விளைவுகள் குறித்தும் விவாதிக்கிறது.டி.என்.ஏ(DNA) வில் தகுந்த மாற்றங்கள் செய்வதும்,நுண்ணிய ரோபோ(microscopic robots) போன்ற அமைப்புகளை கொண்டு நோய் கிருமிகளை அழிப்பதும், ஆய்வுக்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் என்ன சொல்லாம.?

சராசரி ஆயுள் கொஞ்சம் கொஞ்சமாக் அதிகரிப்பது சாத்தியம் என்றாலும் ஒரு அளவிற்கு மேல் அதிகரிப்பது பல சமூக,அரசியல் சிக்கல்களையே உருவாக்கும்.

வாழும் மனிதர்களிலேயே பல்ருக்கு உணவு,உறைவிடம்,வாழ்வாதாரம் வழங்குவதிலேயே பல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.மக்கள் தொகையின் அதிகரிப்பும்,அதற்கு ஏற்ப வசதிகளை பெருக்குவதில் உள்ள சிக்கல்கள் பல்ரின் வாழ்வையே நரகமாக்குகிற‌து.

உண்மையிலேயே இந்த விஷயத்தில் எதுவரை முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.இம்மாதிரி விஷயங்கள் தவறாக்வே பயன் படுத்தப்படும் என்பது நிச்சயம்.

இம்மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாமலே போவது மனிதத்திற்கு நல்லது.



3 comments:

  1. சகோ.
    அந்த chart ல் aging process ஆரம்பிக்கும் வயது அதிகரித்து கொண்டேயிருக்கிறதா என்பதை காட்டவில்லை. அந்த மாதிரி ஒரு புள்ளி விபரம் இருக்கின்றதா????

    life expectancy கூடலாம் தவிர aging process யை நிறுத்த முடியுமா என்பதே சந்தேகம். மருத்துவ வியாபாரம்தான் பெருகும்.

    ஆனால் ஒன்று, eternal life அடைந்துவிட்டால் உலகம் தான் சொர்க்கம் ஏனென்றால் சொர்க்கத்தின் முதல் தன்மையே நித்திய ஜீவன் தான்.

    நன்றி.

    ReplyDelete
  2. //
    இம்மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாமலே போவது மனிதத்திற்கு நல்லது.//

    என்ன திடீர்ன்னு இறங்கு முகம் ஆயிட்டீங்க:)மாற்று கிரக வாழ்க்கை சாத்தியமா என்று ஆராய்வோம்.இன்னொரு கிரகத்து தரிசு நிலத்தை நிரப்பவும் ஆட்கள் வேண்டுமே!

    ஐன்ஸ்டீன் மாதிரி மூளைக்காரர்களை திரும்பவும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியமும் உள்ளதே!

    ReplyDelete
  3. நன்றி சகோ
    நரேன்&ராஜராஜன்

    ReplyDelete